×

அதிகாரிகள் மெத்தனம் அமைதியாக நடந்த மறுவாக்குப்பதிவு வேதாரண்யத்தில் இரவு 8.10 மணி வரை நீடித்த வாக்குப்பதிவு டோக்கன் கொடுத்து அனுமதி

வேதாரண்யம், டிச.31:வேதாரண்யத்தில் இரவு 8.10 மணிவரை வாக்கு பதிவு நீடித்தது. வேதாரண்யம் ஒன்றியத்தில் மொத்தம் 1லட்சத்து11 ஆயிரத்து 986 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 55,392 வாக்காளர்களில் 41,201 பேர் மட்டுமே வாக்களித்தனர். 56,596 பெண் வாக்காளர்களில் 48,120 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகள் 89,321. இது 79.76 சதவீதம் ஆகும்.

தலைஞாயிறு ஒன்றியத்தில் மொத்தம் 46,781 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 22,967பேரில் 18,085 பேர் வாக்களித்தனர். பெண்கள் வாக்காளர்கள் 23,814 பேரில் 19,689 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்தம் 37,774 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.இது 81.02 சதவீதம் ஆகும். இதில் செட்டிப்புலம், தகட்டூர், வெல்லப்பள்ளம், நாளுவேதபதி, அண்டர்காடு, மருதூர் வடக்கு, கத்தரிப்புலம், ஆயக்காரன்புலம் 3 ஆகிய வாக்குசாவடிகளில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8.10 மணி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Tags : silent reassessment ceremony ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...