×

கரூர் சணப்பிரட்டி பகுதியில் பழைய குடிநீர் தொட்டியின்கீழ் ஆபத்தான நிலையில் அஞ்சலகம்

கரூர், டிச. 31:  கரூர் மாவட்டம் சணப்பிரட்டி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் ஆற்றங்கரையோர பகுதியை ஒட்டி உள்ள பழைய குடிநீர் தொட்டியின் கீழ்ப்புற பகுதியில் உள்ள சிறிய அறையில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இதே கட்டிடத்தில் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வருவதால் பணியாற்றும் ஊழியர்களும், வந்து செல்லும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இதனை வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய குடிநீர் தொட்டியில் செயல்படும் தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Karur Sanapratti ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி