×

மாயனூரில் இருந்து கதவணை செல்லும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், டிச. 31: கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து கதவணை பகுதிக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் மாயனூர் ரயில்வே நிலையம் பின்புறம் காவிரி ஆற்றங்கரையில் கதவணை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாயனூர் கதவணை, காவிரி ஆறு, ஆற்றின் எதிர்ப்பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்ட பகுதிகள் போன்ற பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் கதவணை வரையிலான சாலை மிகவும் மேடும் பள்ளமுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி, இந்த சாலையை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Motorists ,dirt road ,Doorway ,Mayanur ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...