×

குளித்தலை வதியம் வாக்கு சாவடியில் வாக்கு பெட்டியை மூட முடியாததால் பரபரப்பு

குளித்தலை, டிச. 31: குளித்தலை ஒன்றியம் வதியம் ஊராட்சி பத்தாவது வாக்குச்சாவடியில் நேற்று மாலை வாக்கு பதிவு முடியும் நேரத்தில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டு வாக்காளர்கள் 50 பேர் வந்து விட்டதால் அவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் டோக்கன் வழங்கி வாக்கு பதிவு செய்ய அனுமதித்தனர்.

இறுதியாக வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது ஒரு பெட்டியில் வைத்து முடித்தவுடன் அடுத்த பெட்டியில் வைக்க அதிகாரிகள் பெட்டியை எடுத்தபோது அதில் பழுது ஏற்பட்டதால் பெட்டியை மூடகூட முடியவில்லை இதனால் வேட்பாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வாக்குச்சாவடி அதிகாரிகள் அருகிலிருந்த வாக்கு மையத்திலிருந்து புதியதாக வாக்கு பெட்டியை எடுத்து வந்து அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் மீண்டும் அனைத்து வாக்கு சீட்டுக்களையும்எடுத்துப்போட்டு வாக்கு பெட்டியை முறையாக சீல் வைத்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவு முடிந்த நேரத்தில் சிறிது பரபரப்பாக இருந்தது.

Tags : bathtub residence ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...