×

சாத்தூர் அருகே வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு

சாத்தூர், டிச.31:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ஒன்றியத்தில் நேற்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சாத்தூர் அருகே உள்ள குண்டலகுத்தூர் மற்றும் வீரார்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு சாவடிகளை விருதுநகர் கலெக்டர் கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தூரில் பாஜக வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி பை வினியோகம் செய்தது உறுதி செய்யப்பட்டால் அரிசி பை வழங்கிய வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள வில்லிபத்திரி ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆனையத்தின் அனுமதி பெற்று விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Collector ,Chatur ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...