×

வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

விருதுநகர், டிச.31:  விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 6 ஒன்றியங்களில் என இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட தேர்தல் டிச.27ல் நடைபெற்ற ராஜபாளையம் ஒன்றிய வாக்குபெட்டிகள் ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் திருவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு ஒன்றிய வாக்குப்பெட்டிகள் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியிலும், சிவகாசி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றிய வாக்குப்பெட்டிகள் ஆலங்குளம் ஈ.ஆர்.ஆர்.ராமசுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

 இரண்டாம் கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்ற சாத்தூர் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் சாத்தூர் எஸ்.ஹெச்.என்.எஸ். எட்வர்டு மேல்நிலைப்பள்ளியிலும், விருதுநகர் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை ஒன்றிய வாக்குப்பெட்டிகள் எஸ்பிகே ஆண்கள் மேநிலைப்பள்ளியிலும், காரியாபட்டி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியிலும், திருச்சுழி ஒன்றிய வாக்குப்பெட்டிள் கல்லூரணி எஸ்பிகே மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...