×

உத்தமபாளையத்தில் திடீர் மின்தடையால் தவித்த வாக்காளர்கள்

உத்தமபாளையம், டிச.31: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமங்களில் அடிக்கடி மின்தடையானதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் இருளில் தவித்தனர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ராயப்பன்பட்டி, நாகையகவுண்டன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி,உ.அம்மாபட்டி உள்ளிட்ட ஊர்களில் காலை முதலே பொதுமக்கள் மிக நீண்ட க்யூவில் நின்று வாக்களித்தனர். இதற்காக வாக்காளர்கள் தங்களது வாக்குசாவடியில் காத்திருந்தனர். அப்போது திடீர், திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மீண்டும் வருவதற்கு 10 நிமிடம், 15 நிமிடமாகும்போது பெரும்பாலான வாக்குசாவடிகள் இருளில் மூழ்கியே இருந்தன. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்தனர். குறிப்பாக வயதான முதியவர்கள் தங்களது உதவிக்கு அதிகாரிகளை அழைத்து ஓட்டுப்போடும் நிலை இருந்தது. மதியத்திற்கு பிறகே இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. பெரும்பாலன ஊராட்சிகளில் தடையின்றி மின்சாரம் வந்தது.

Tags : Voters ,emergency fire ,Uthamapalayam ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...