×

போடியில் சின்னம் இல்லாததால் வேட்பாளர் அதிர்ச்சி..

போடி,டிச.31: போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் நேற்று 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. உப்புக்கோட்டை ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 8வது வார்டுக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு உப்புக்கோட்டை பச்சையப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடந்தது. எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர்.

இதில் ராசு என்பவர் ஒரு வேட்பாளராவார். வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது 15 வாக்குகள் பதிவான பிறகு தான், தனது சின்னம் இடம் பெறவில்லையென அவருக்கு தெரிய வந்தது. இதனால் வேட்பாளர் ராசு உடனடியாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் சென்று ஓட்டு சிலிப்பில் 4 சின்னங்களில் தனது கார் சின்னம் இடம் பெறாமல் போய் விட்டது. அதனால் ஓட்டுப் பதிவை நிறுத்த மனுகொடுத்தார். அதனை ஏற்ற மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Candidate ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...