×

வாக்களித்த ஒரு மணி நேரத்தில் 83 வயது மூதாட்டி மரணம்

ஒரத்தநாடு,டிச.31:தஞ்சை அருகே வாக்களித்து விட்டு வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மூதாட்டி இறந்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தோப்பநாயகத்தை சேர்ந்த வீரப்பன் மனைவி லட்சுமி (83). இவர், உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டுமென உறவினர்களிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு உறவினர்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்ற லட்சுமி வாக்களித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்த லட்சுமி மாலை 5 மணியளவில் திடீர் இறந்தார். வாக்களித்த ஒரு மணி நேரத்தில் இறந்து போன லட்சுமிக்கு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் 2ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அந்தந்த ஒன்றிய வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு அந்தந்த பகுதி பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை ஒன்றிய தேர்தலில் பதிவான வாக்குகளின் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு முழுவதும் ஒளிரும் மின் விளக்குகள் போடப்பட்டுள்ளன.

Tags : granddaughter ,voting ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...