×

வழுத்தூர் பகுதி காலி மனைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

பாபநாசம், டிச. 31: பாபநாசம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் பகுதி உள்ளது. இநத பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன் இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றனர். வழுத்தூரில் உள்ள நூரியா தெருவில் பலர் குடியிருந்து வருகின்றனர். இந்த தெருவில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வாகனங்களில் செல்லவோ, நடந்து செல்லவோ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காலி மனைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், வழுத்தூரில் மழைநீர் வடிய வடிகால் இல்லாததால் தான் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Valdur ,area ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது