×

திமுக மகளிரணியினர் வீட்டு வாசலில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோலம்

மதுரை, டிச. 31: மதுரையில் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்ட திமுக மகளிரணியினர் தங்கள் வீட்டு முன் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கோலமிட்டனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிரான போராட்டங்கள் நீடித்து வருகின்றன. திமுக மகளிரணியினர் நேற்று தமிழகம் முழுவதும் வீட்டு வாசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிட்டு வாசகங்களை எழுதினர். மதுரை கடச்சனேந்தலில் உள்ள முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணை செயலாளருமான தமிழரசி வீட்டு வாசலில் கோலமிட்டு வாசகங்களை எழுதப்பட்டு இருந்தது. இதேபோல் மதுரை ஆரப்பாளையம், செல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் திமுக மகளிரணியினர் வீட்டு வாசலில் கோலமிட்டு பரபரப்பூட்டினர். இதை அப்பகுதி மக்கள் பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.

Tags : Resident Citizen ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு