மதுரை, டிச. 31: மதுரை நரிமேட்டில் உள்ள நேரு வித்யாசாலை மேல்நிலைப்பள்ளியில் 1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை (25 ஆண்டுகள்) படித்த முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த சந்திப்பில் தாம் பள்ளியில் படித்து அமர்ந்த வகுப்பறை, பேசி மகிழ்ந்த இடங்கள், மறக்க முடியாத சம்பவங்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.