×

சோழவந்தான் நகர் முழுவதும் சிசிடிவி

சோழவந்தான், டிச. 31: சோழவந்தானில் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்படி, டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆலோசனையின்படியும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமை வகிக்க, எஸ்ஐக்கள் சிவாஜி கணேசன், ரபீக் முன்னிலை வகித்தனர். தலைமை காவலர் செல்லப்பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலி குறித்து எளிய முறையில் விளக்கப்பட்டது. பின்னர் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் முழுவதும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தவும், இதை விரைவில் நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் காளீஸ்வரன், தங்கராஜ், பாண்டியன், ஜவஹர், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழு அமைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் சேர்மன் முருகேசன், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் சுப்பையா, முத்துவேல், மகேஷ்வரன் மற்றும் வர்த்தகர் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : CCTV ,Cholavantan Nagar ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...