×

பூங்காவுக்கு ஒதுக்கிய இடங்களில் புதர்கள் மண்டி கிடக்கும் அவலம் ஒட்டன்சத்திரம் மக்கள் வேதனை

ஒட்டன்சத்திரம், டிச. 31: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் பூங்காவிற்காக ஒதுக்கிய இடங்களில் புதர் மண்டி கிடக்கிறது. இந்த இடங்களை முறையாக பராமரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 1 முதல் 18 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சியின் 1 முதல் 18 வார்டுகளில் கே.கே.நகர், கருவூலக்காலனி, சொசைட்டி காலனி, தென்றல்நகர், நல்லாக்கவுண்டன்நகர், குறிஞ்சி நகர், ஏ.பி.பி.நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

Tags : areas ,
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!