×

வீட்டு சிலிண்டர்களை கடைகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை சப்-கலெக்டர் எச்சரிக்கை

பழநி, டிச.31: கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பழநி சப்-கலெக்டர் உமா எச்சரித்துள்ளார். பழநி மலைக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தைப்பூச பாதயாத்திரை பக்தர்களும் அதிகளவு வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்காக அடிவார பகுதியில் ஏராளமான தற்காலிக உணவுக்கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல கடைகளில் வணிக சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பழநி சப்-கலெக்டர் உமா கூறுகையில், ‘‘அடிவார கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழநி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகைக்கடைகள், வணிக வளாகங்கள், பேக்கரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

Tags : stores ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...