×

மன்னார்குடி- ெசன்னை விரைவு ரயிலை திருவாரூரிலிருந்து திருச்சி வரை இயக்க வேண்டும்

திருவாரூர், டிச.31: மன்னார்குடி சென்னை விரைவு ரயிலை திருவாரூரிலிருந்து திருச்சி வரையில் இயக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து தினந்தோறும் இரவு 10. 25 மணியளவில் மன்னார்குடி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது புறப்பட்டு திருவாரூர் வழியாக சென்னை செல்கிறது. இதேபோல் எதிர் மார்க்கத்தில் சென்னையிலிருந்து இரவு 9 மணியளவில் புறப்படும் இந்த ரயிலானது அதிகாலை 3.30 மணியளவில் திருவாரூர் வந்தடைந்து அதன்பின்னர் மன்னார்குடிக்கு புறப்பட்டு செல்கிறது. பின்னர் இந்த ரயில் அங்கிருந்து காலை 8.30 மணியளவில் பாசஞ்சர் ரயிலாக புறப்பட்டு திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு சென்று மீண்டும் அங்கிருந்து திருவாரூர் வழியாக இரவு 7 மணி அளவில் மன்னார்குடி சென்றடைகிறது. இந்நிலையில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வரையிலான 40 கிமீ ரயில் பாதையினை மின்மயமாக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மன்னார்குடியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று (31ம் தேதி) முதல் திருவாரூர் வரையில் மட்டுமே இயக்கப்படும் என்றும் மயிலாடுதுறைக்கு ஜனவரி மாதம் 31ம் தேதி வரையில் இயக்கப்படாது எனவும் தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயிலானது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்வது இன்றுடன் நிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த ரயிலை திருவாரூரில் இருந்து திருச்சி வரையில் இயக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் கூறுகையில், திருவாரூரிலிருந்து காலை 8 .15 மணிக்கு திருச்சிக்கு ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் பின்னர் மதியம் 2 மணி அளவில் தான் பாசஞ்சர் ரயில் என்ற நிலையில் இடைப்பட்ட 4 மணிநேரத்தில் திருச்சிக்கு செல்வதற்கு ரயில் இல்லாமல் இருந்து வருகிறது.மேலும் அதிகாலை நேரத்திலும் ஒரு ரயில் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுமட்டுமன்றி பகல் நேரங்களில் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுகுறித்து தென்னக ரயில்வே எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. எனவே திருவாரூரில் காலை 9.30 மணி அளவில் நிறுத்தப்படும் இந்த மன்னார்குடி பாசஞ்சர் ரயிலை அங்கிருந்து தஞ்சாவூர் திருச்சி வரையில் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கிட நட வடிக்கை எடுத்திட வேண்டுமென தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags : Mannargudi -Sesan Express ,Trichy ,Thiruvarur ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...