×

வத்தலக்குண்டு அருகே தொடர் விபத்து பகுதியில் பேரிகார்டு

வத்தலக்குண்டு, டிச.31: தினகரன் செய்தி எதிரொலியினால் வத்தலக்குண்டு அருகே அடிக்கடி விபத்து நடந்த இடத்தில் போலீசார் போரிகார்டுகள் வைத்தனர். வத்தலக்குண்டுவிலிருந்து பெரியகுளம் சாலையில் பழைய வத்தலக்குண்டு பிரிவு பகுதியில், கடந்த 5 ஆண்டுகளில் 6 பேரை பலிகொண்ட விபத்து உள்பட மொத்தம் 20 விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த தந்தை, மகன் பஸ் மோதி பலியாயினர். இதனைத்தொடர்ந்து இந்த இடத்தில் பேரிகார்டுகளை வைக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் போலீசார், அந்த இடத்தில் 2 பேரிகார்டுகளை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘போலீசார் தற்போது 2 பேரிகார்டுகளை வைத்துள்ளனர். அதே இடத்தில் மேலும் ஒரு பேரிகார்டு வைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : crash area ,Wattalakundu ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி