×

மயங்கி விழுந்து முதியவர் பலி

திருச்சி, டிச.31: திருச்சியில் 60 வயது முதியவர் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். திருச்சி தில்லைநகர் முதல் குறுக்கு தெருவில் நேற்று 60 வயது மதிக்கதக்க ஒருவர் நடந்து வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குபதிந்த தில்லைநகர் போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...