×

பைக்மீது லாரி மோதி டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது

திருச்சி, டிச.31: ரங்கத்தில் பைக் மீது லாரி மோதி டிராவல் ஏஜென்சி உரிமையாளர் பலியானார். ரங்கம் ரெங்காநகரை சேர்ந்தவர் ரெங்கபிரசாத் (25). இவர் ரங்கம் யாத்ரீ நிவாஸ் அருகே டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை வேலை விஷயமாக பைக்கில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவிநகர் அருகே வந்து விட்டு பின், வேலை முடிந்து மீண்டும் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரெங்கபிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Travel agency owner ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை