×

தார்பாய் விரித்தபோது லாரியில் இருந்து தவறிவிழுந்து டிரைவர் பலி

திருச்சி, டிச.31: திருச்சியில் லாரியில் லோடுக்கு தார்ப்பாய் விரித்தபோது கீழே தவறி விழுந்து டிரைவர் பலியானார். திருச்சி கோட்டை இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). லாரி டிரைவர். இவர் நேற்று லாரியில் லோடு ஏற்றி கொண்டு ஓயாமரி அருகே சென்றபோது சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு மேலே ஏறி தார்பாய் விரித்து சரிசெய்தார். அப்போது திடீரென லாரியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிந்த கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Driver crashes ,Tharpai ,
× RELATED முந்தி செல்ல முயன்றபோது லாரி மீது...