தாராபுரம்.டிச.31: குடிமங்கலத்திலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் மருதூர் கிராம உள்ளது. இங்கு இருந்து ஆயில் லோடு ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று பல்லடத்தில் உள்ள கோழிதீவன ஆலைக்கு செல்ல மருதூரில் வளைவான சாலையை கடக்கும் போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதனால் லாரியிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் ஆயில் சாலையில் கொட்டி வெள்ளமாக ஓடியது. அடர்த்தியும், வழுவழுப்பு தன்மையும் இல்லாத இந்த ஆயில் கோழி தீவன தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. அடர்த்தி இல்லாத் காரணத்தால் சாலையில் ஓடிய ஆயிலை கடந்து சென்ற வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக விபத்துகளில் சிக்கவில்லை. ஆனால் ஆயிலில் இருந்து கிளம்பிய துர்நாற்றம் காரணமாக கிராம மக்களும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.