×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ரோட்டில் பெயிண்டால் எழுதிய 8 பேர் கைது

திருப்பூர், டிச.31: திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென ஆங்கில எழுத்தில் காங்கயம் ரோடு, சி.டி.சி. கார்னர் பகுதியில் ரோட்டில் எழுதிய மனிதநேய ஜனநாயக கட்சியினரை நேற்று போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள சி.டி.சி. கார்னர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா வேண்டாம் என வெள்ளைநிற பெயிண்டால் ரோட்டில் எழுதிய மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு போலீசார் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 8 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும் எழுத்துக்களை வெள்ளை நிற பெயிண்டால் போலீசாரே அழித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்