ஊட்டி, டிச. 31: கடந்த 10 நாளில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 1 லட்சத்து 28 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி புத்தாண்டை கொண்டாட தற்போது சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் குட்டீஸ்கள் கூட்டமே அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 908 ேபர் வந்துள்ளனர். ஒரு வாரம் தொடர் விடுமுறை என்பதாலும், புத்தாண்டை ெகாண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளதாலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்ட வாய்ப்புள்ளது.