×

முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

சூலூர்,டிச.31 ; சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவராக போட்டியிட்டவர். சு.கோபாலகிருஷ்ணன். இவரது தந்தை இதே ஊராட்சியில் தலைவராக பதவி வகித்துள்ளார். அவரது மறைவிற்குப் பின்னர் முதல் முறையாக களம் கண்ட கோபாலகிருஷ்ணன் தனது தந்தை வழியில் பொதுப் பணியாற்ற நண்பர் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் தீவிரமாக பணியாற்றினார். நேற்றைய தினம் தேர்தல் முடிந்த பின்பு அவரது ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியதைக் குறிக்கும் வகையில் இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை இடப்பட்டதைக் காட்டி சந்தோசமடைந்தனர்..ஜனநாயக கடமையாற்றிய அனைவருக்கும் கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Candidate ,panchayat leader ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...