×

மகா மாரியம்மன் கோயில் விழா இன்று பூச்சாட்டுடன் துவக்கம்

ஈரோடு, டிச. 31:  ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (31ம் தேதி) இரவு 6.30 மணிக்கு பூச்சாட்டுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து இரவு சிறப்பு பூஜைகளுடன் 8 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தினமும் பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபடுவார்கள். வரும் ஜன.7ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலம் வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா, 8ம் தேதி காலை 7 மணிக்கு பொங்கல் வைத்தலும், மாவிளக்கு பூஜையும், மாலை 4 மணிக்கு நையாண்டி மேளத்துடன் பூந்தேரோட்டமும் நடக்கிறது.

Tags : Great Mariamman Temple Ceremony ,
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை