×

எஸ்.டி.பி.ஐ செயற்குழு கூட்டம்

ஈரோடு, டிச. 31:   சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.   இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அசன்அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குடியுரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருவாரூர் ஆகிய 5 பகுதிகளில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடக்கவுள்ளது. இதில் மேற்கு மண்டத்திற்குட்பட்ட கோவையில் ஜனவரி 5ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பொதுமக்களை அழைத்து சென்று திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  

 இதில் மாவட்ட செயலாளர் புளியம்பட்டி சுலைமான், செயற்குழு உறுப்பினர்கள் ஆட்டோ அப்துல் ரகுமான், முசாதிக் அலி, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் முனாப், மேற்கு தொகுதி தலைவர் கேபில் சபீர்அகமது, பவானி தொகுதி தலைவர் தர்வேஸ், செயலாளர் அபூபக்கர் சித்திக், பவானிசாகர் தொகுதி செயலாளர் பசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் குறிஞ்சி பாஷா நன்றி கூறினார்.

Tags : SDBI Executive Committee Meeting ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு