×

மதுபோதை தகராறில் பார் கண்ணாடி உடைப்பு அதிமுக எம்எல்ஏ உதவியாளர் உட்பட 7 பேர் பிடிபட்டனர்

சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தனியார் பாரின் கண்ணாடிகளை அடித்து உடைத்த அதிமுக எம்எல்ஏ அலுவலக உதவியாளர் உட்பட  7 பேரை போலீசார் கைது ெசய்தனர். சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (29). இவர் ராமாபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். மனோஜ்குமார் நேற்று முன்தினம் இரவு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டலில் உள்ள பார் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தார். போதை தலைக்கேறியதும், எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த நபர்களுக்கும் மனோஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனோஜ்குமாரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து ெசன்றனர். இதில் காயமடைந்த மனோஜ்குமார் தனது செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு தனியார் ஓட்டல் பாருக்கு வரவழைத்துள்ளார்.

அதன்படி அவரது நண்பர்கள் 6 பேர் சம்பவ இடத்திற்கு வந்து தகராறு செய்து, தனியார் பாரின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் பார் மேலாளர் விஸ்வநாதன் (33) சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விரைந்து வந்து மதுபோதையில் கண்ணாடிகளை உடைத்த 7 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர்.   அப்போது, மனோஜ்குமார் அவரது நண்பர்களான தி.நகர் அதிமுகம் எம்எல்ஏவின் அலுவலக உதவியாளர் சண்முகம் (19), வடபழனி அழகிரி நகரை ேசர்ந்த ஏசி மெக்கானிக் அசோக்குமார் (29), வடபழனி கங்கையம்மன் காலனி 3வது ெதருவை சேர்ந்த கல்லூரி மாணவன் மாணிக்பாஷா (19), கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் விஸ்வேஸ்வரன் (25), வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபல கானா பாடகர் சுதாகர் கார் டிரைவர் அயாத் (19), வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த மருந்து கடை ஊழியர் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் என தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் 7 பேரை கைது செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bar mirror aide ,assistant ,MLA ,drug dispute ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை