கடத்தூர், டிச.31: கடத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடத்தூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் சுவர்கள் அனைத்தும் சேதமடைந்து, விரிசல் விட்ட நிலையில் உள்ளது. இந்த சுவர் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பழுதடைந்த பள்ளி சுற்றுச்சுவரை புதிதாக கட்ட, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.