×

ஊத்தங்கரையில் துப்புரவு பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஊத்தங்கரை, டிச.31:ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகள் கொடுத்து புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பிறப்பையொட்டி, ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களின் தூய்மை பணியை பாராட்டி பரிசுகள், காலண்டர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி ஊழியர்கள் பெரியசாமி, வெங்கடேசன், பழனி, சம்பத் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

Tags : celebration ,cleaning staff ,Ootankara ,
× RELATED எதிர்கால தமிழ்நாட்டிற்கான...