×

ரயில்வே பாலத்திற்கு புதிய தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

தர்மபுரி, டிச.31: சிந்தல்பாடி ரயில்வே பாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒடசல்பட்டியில் இருந்து மொரப்பூர் செல்லும் வழியில், தொங்கனூர் ரயில் நிலையத்தையொட்டி சிந்தல்பாடியில் நீண்ட காலமாக கட்டப்படாமல் இருந்த ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலை சுமார் 7 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பாலத்திற்கான இணைப்பு சாலை குறுகலாக உள்ளது. எனவே, இணைப்பு சாலையை அகலப்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட சாலைக்கு பாதுகாப்பு கருதி, பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும். தொங்கனூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அமைக்க வேண்டும். மேலும், அதே ரயில் நிலையத்திற்கு ஸ்டேசன் மாஸ்டரை ரயில்வே நிர்வாகம் நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என சிந்தல்பாடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway bridge ,
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...