×

காரிமங்கலம் அருகே வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு

தர்மபுரி, டிச.31: காரிமங்கலம் ஒன்றியம் கீழ்கொள்ளுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் காட்டுசிகரலஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுரி(36). இவர் கும்பாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். நேற்று 2ம் கட்ட தேர்தல் இப்பகுதியில் நடந்தது. வாக்குச்சாவடி கீழ் கொள்ளுப்பட்டி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிந்தது. நேற்று இரவு 7.30 வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்து ஏற்றுவதற்கு வாகனம் வந்தது. அப்போது வேட்பாளர் கவுரி திருக்குமரன் வாக்குச்சாவடிக்குள் இருந்தார். அப்போது வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது காரின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். இதுகுறித்து அவர், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரவு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Candidate ,Karimangalam ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...