×

விபத்தில் இறந்த லாரி டிரைவரின் குடும்பத்திற்கு q 1 லட்சம் நிதி உதவி

அஞ்சுகிராமம்,  டிச.31 : குமரியில் வாகன விபத்தில் இறந்த லாரி ஓட்டுனரின் குடும்பத்திற்கு  லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் q1 லட்சம் நிதி உதவி  வழங்கப்பட்டது. மயிலாடி அருகே ஈத்தங்காடு  பகுதியை சேர்ந்தவர் ஐயம்பெருமாள்(34). இவர் நாகர்கோவில் வட்டார லாரி மற்றும்  மினி லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினராக இருந்து லாரி ஓட்டி  வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  நடந்த ஒரு சாலை விபத்தில் ஐயம்பெருமாள் இறந்தார். இவருக்கு மனைவியும், ஜனனி  என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. கணவரை இழந்ததால் ஐயம்பெருமாளின்  மனைவியும், மகளும் வறுமையில் வாடி வந்தனர்.இதனைத்தொடர்ந்து  நாகர்கோவில் வட்டார லாரி மற்றும் மினி லாரி உரிமையாளர் நலச்சங்கம்  சார்பில் குழந்தையின் எதிர்கால நலன்கருதி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை  ஐயம் பெருமாளின் மகள் ஜனனியிடம் சங்க தலைவர் சுப்பிரமணியம், செயலாளர்  டென்னிஸ் கோல்டு, பொருளாளர் செல்வின் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். இந்த பணம் சிறுமியின் பெயரில் இந்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முழுமையாக வரவு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...