×

பூதங்குடி வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யாததால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு, டிச. 31: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதியான சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யாததால் மாற்றுத்திறனாளி வாக்களார்கள் கடும் அவதி அடைந்தனர்.
கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பூதங்குடி ஊராட்சியில் வாக்குச்சாவடி எண் 5, 6 ஆகிய பூத்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பூதங்குடியில் 7, 8. 9 ஆகிய வார்டுகளில் ஆண், பெண் என 700க்கும் மேற்பட்ட வாக்களர்கள் உள்ளனர்.
இரண்டுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவில் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. பூதங்குடியை சேர்ந்த சின்னதம்பி மகள் மாற்றுத்திறனாளி இளமதி(30) நேற்று ஓட்டு போட வந்தபோது ஓட்டுச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இல்லாததால் ஓட்டுப்போடும் அறைக்கு சிரமப்பட்டு சென்றார்.
 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் ஏற்பாடு செய்யாததால் பூதங்குடியில் ஓட்டுப்போட வந்த மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags : polling stations ,
× RELATED மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா