×

செய்துங்கநல்லூரில் சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

செய்துங்கநல்லூர், டிச. 31: செய்துங்கல்லூரில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாக்காமல் சாலைகளில் மேய விடுவதால் வாகனஓட்டிகள், ெபாதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Cattle accident ,roads ,Kalinganallur ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...