×

குளத்தூர் வட்டாரத்தில் வீதிகளில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு

குளத்தூர், டிச. 31: குளத்தூர் வட்டாரத்தில்  தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு நிலவுகிறது. குளத்தூர்   அருகே ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லம்பரம்பு கிராமம் உள்ளது.   இக்கிராமத்தின் துவக்கப் பள்ளி அருகே  வீதிகளில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு நிலவுகிறது.   குறிப்பாக போக்குதடத்திற்கு வழியின்றி தெருவின் மையப்பகுதியில் தேங்கி துர்நாற்றம்   வீசுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.   மேலும் பள்ளி அருகிலேயே கழிவுநீர் தேங்குவதால் பள்ளியில் பயிலும்   குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் என அப்பகுதியினர்   அச்சத்தில் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கையாக   அப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்றி வீடுகளில் இருந்து   வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் அமைக்க நடவடிக்கை   மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streets ,area ,Klathoor ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...