×

கூத்தன்குழி மீனவர் உடலை மீட்க வேண்டும்

நெல்லை, டிச.31:  கூத்தங்குழியில் மீன்பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறிவிழுந்த மீனவர் உடலை மீட்டு தரக்கோரி ராதாபுரம் எம்எல்ஏ இன்பத்துரை கலெக்டரிடம் மனு அளித்தார்.ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பத்துரை நேற்று நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதிஷை நேரில் சந்தித்து அளித்த மனு: ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கூத்தங்குழியை ேசர்ந்த சிலுவை கித்தேரியான்(41) என்பவர் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. எனவே கடலோர காவல்படை மூலம் தேடுதல் வேட்டை நடத்தி அவரது உடலை மீட்டுத்தர வேண்டும்.
மேலும் வறுமையில் வாடும் அவரது குடும்பத்திற்கு மீன்வளத்துறை மூலம் உடனடியாக இடைக்கால நிவாரணங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா உடன் சென்றார்.

Tags : fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...