×

திசையன்விளை நவ்வலடி தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும்

நெல்லை, டிச.31: திசையன்விளை முதல் நவ்வலடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிட கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நெல்ைல கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் ஷேக் முகம்மது தலைமையில் கட்சியினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் இரணியன் ஆகியோர் நெல்லை கலெக்டரிடம் நேற்று அளித்த மனு விபரம்: திசையன்விளை முதல் நவ்வலடி செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைப்பாலம் மழைக்காலங்களிலும், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. அந்த வழியாகவே தலைவன்விளை, ஆயன்குளம், சொக்கலிங்கபுரம், கரைசுத்துப்புதூர், இராமன்குடி, ஆத்தங்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் கிராம மக்கள் அத்தியவாசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவ தேவைகளுக்கு திசையன்விளை செல்லவும் அப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். மழைகாலங்களில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே அந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிட கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை