×

வாசுதேவநல்லூரில் ரத்ததான முகாம்

வாசுதேவநல்லூர்,டிச.31: வாசுதேவநல்லூரில் ரத்த தான முகாம் நடந்தது. வாசுதேவநல்லூர் நாடார்உறவின் முறை காமராஜர் மகளிர் உயர்நிலை பள்ளி வளாகத்தில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ மற்றும் ஜீகோ நிறுவனமும் இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. முகாமுக்கு  ரோட்டரி  கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ தலைவர் கணேசன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் மண்டலம்  சிக்கந்தர் பாட்சா வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.  விழாவில் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், நாடார் பள்ளி கமிட்டி தலைவர் தவமணி, ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எலிசா, குற்றாலம் மெட்ரோ செயலாளர்  இசக்கிமுத்து(எ) சூரியபுத்திரன் சீமான் மணிகண்டன் எம்.ஆர்ராசு, சசிகுமார் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். 30க்கு மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.. அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வீரமணிகண்டன் நன்றி கூறினார்.

Tags : Rathdana Camp ,Vasudevanallur ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு