×

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை 52 வயது எலக்ட்ரீஷியன் கைது

புழல், டிச. 30:  புழல், கன்னடபாளையம், சிவராஜ் தெருவை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாய் இறந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிந்தாமணி (52).  எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த எலக்ட்ரிஷியன் சிந்தாமணி (52), தனது வீட்டில் இட்லி சாப்பிட வருமாறு சிறுமியை அழைத்துள்ளார். பின்னர் அவளை வலுக்காட்டாயமாக இழுத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர்  பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது தந்தையிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்த புகாரின்படி, புழல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிந்தாமணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : electrician ,
× RELATED தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு...