×

பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் தகனம்

பாலக்காடு, டிச.30: பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை அடுத்த குழல்மந்தம் குத்தனூரைச் சேர்ந்த கண்ணன்குட்டி மகன் சஜீவ் (25). இவர் பூனாவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். போர் முகாம்களில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாலம் இடிந்து இடிபாடுகளில் சிக்கி சஜீவ் உட்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 7 ராணுவ வீரர்கள் காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் சஜீவின் உடல் பூனாவிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் நேற்று வந்தடைந்தது. பின்னர் கோவை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக குழல்மந்தம் குத்தனூர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் ராணுவ, போலீஸ் மரியாதையுடன் ஐவர்மடத்தில் தகனம் செய்யப்பட்டது.

Tags : soldier ,Palakkad ,
× RELATED கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின