×

புத்தாண்டையொட்டி கோைவ அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கோவை, டிச. 30: ஆங்கில புத்தாண்டு நாட்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி நள்ளிரவில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நள்ளிரவுகளில் இளைஞர்கள் அவினாசி சாலைகளில் பைக் ரேஸ் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும், இளைஞர்கள் நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.  குடும்பத்துடன் புத்தாண்டு தினத்தன்று பலர் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, விபத்து உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன் ஆகிய வசதிகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்தார்.

Tags : Goa Government Hospital ,
× RELATED கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு