சத்தியமங்கலம், டிச.30. சத்தியமங்கலம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராம ஊராட்சிகளில் 74,146 வாக்காளர்களும், பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் 63,895 வாக்காளர்களும் உள்ளனர். 2 ஒன்றியங்களிலும் சேர்த்து 3 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 15 பேரும், 28 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 95 பேரும், 30 கிராம ஊராட்சித்தலைவர் பதவிகளுக்கு 150 பேரும், 288 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 804 பேரும் என மொத்தம் 1,064 போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பதற்காக சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 125 வாக்குச்சாவடிகளும், பவானிசாகர் ஒன்றியத்தில் 112 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள், க்குச்சீட்டுகள்,மை,வீல்சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் வாகனங்களில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.