×

உடுமலையில் கூவி, கூவி கழுதைப்பால் விற்பனை

உடுமலை,டிச.30: உடுமலையில் கழுதைப்பால் 50 மில்லி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.உடுமலை பகுதியில் உள்ள கிராமங்களில்,  கடந்த சில தினங்களாக திருச்சியில் இருந்து வந்துள்ள சிலர், கழுதைகளுடன் கிராமம், கிராமமாக சென்று பால் கறந்து விற்கின்றனர்.முன்பு ஒரு சங்கு பால் 50  ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது கொஞ்சம் மவுசு குறைந்து 50 மில்லி 50  ரூபாய்க்கு விற்கின்றனர்.  இதை பலரும் ஆர்வமுடன் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

இதனால் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு தீரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என பால் விற்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கழுதைப்பாலால் எந்த நன்மையும் இல்லை என்றும், இது மூடநம்பிக்கை என்றும்,  நோய்த் தொற்று ஏற்படத்தான் வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Udumalai ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...