×

பூஜை செய்த பின்னர் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

காரிமங்கலம், டிச.30:  காரிமங்கலம் ஊராட்சி  ஒன்றியத்துக்குட்பட்ட 29 ஊராட்சி தலைவர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் இன்று(30ம் தேதி) நடக்க உள்ளது. இதையொட்டி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. நேற்று வாக்கு பதிவுக்கான பணிகள் இறுதி செய்யப்பட்டு, வாக்கு சீட்டு மற்றும் வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, வாக்கு சீட்டு மற்றும்  வாக்கு பெட்டி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது. வாக்கு பதிவிற்கான அனைத்து பணிகளையும், மண்டல தேர்தல் அலுவலர் வேதநாயகம், தேர்தல் அலுவலர் பிடிஓ வெங்கடேசன், உதவி தேர்தல் அலுவலர் பிடிஓ வடிவேலன், துணை பிடிஓக்கள் சர்வோத்தமன், முனிரத்தினம், சிவப்பிரகாசம், தாசில்தார் கலைவாணி உட்பட பலர் செய்துள்ளனர்.

Tags : pooja ,
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்