×

ஜம்மணஅள்ளி கூட்ரோட்டில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை

அரூர், டிச.30: அரூர் அருகே ஜம்மணஅள்ளி கூட்ரோ பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் அமைக்க ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூரிலிருந்து கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செல்லும் வழியில் ஜம்மணஅள்ளி கூட்ரோடு உள்ளது. இங்கு ஜம்மணஅள்ளி, பறையப்பட்டி, தென்னகரம், ஆலாமரத்துப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறிது தூரம் நடந்து வந்து பேருந்திற்கு காத்திருக்க வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, நிழற்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிழற்கூடம் சேதமடைந்ததையடுத்து, நிழற்கூடத்தை இடித்து அகற்றினர். பின்னர் அப்பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,Jammualli Kootrod ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை