×

திருவில்லிபுத்தூரில் கார் மோதி மின்கம்பம் சேதம்

திருவில்லிபுத்தூர், டிச. 30:  திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது கொலூர்பட்டி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி வேகமாக வந்து மோதியது. இதில் மின்கம்பம் பலத்த சேதமடைந்தது. அதேபோல மோதிய வேகத்தில் காரும் பலத்த சேதம் அடைந்தது. இது தொடர்பாக நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி மின் கம்பத்தில் மோதிய கார் யாருக்கு சொந்தமானது எந்த பகுதியை சேர்ந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கும் எவ்வித பார்வை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மின்சாரம் அந்த லைனில் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...