×

டூவீலரில் இருந்து கீழே விழுந்த பெண் பலி

விருதுநகர், டிச. 30: டூவீலரிலிருந்து கீழே விழுந்த பெண் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் வாழவந்தான் தெருவில் வசிக்கும் கணேசபாண்டியன் (65). இவர் தனது தங்கை பாக்கியலட்சுமி (53) உடன் நேற்று காலை தங்கையின் தோழி அருணாவை பார்க்க டூவீலரில் பைக்கில் சென்றுள்ளனர். சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே செல்லும் போது பாக்கியலட்சுமி மயக்கம் வருவதாக கூறியதும், கணேசபாண்டியன் டூ வீலரை நிறுத்துவதற்குள் பாக்கியலட்சுமி கீழே விழுந்துள்ளார்.தலையின் பின்பக்கம் காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Duveler ,
× RELATED நடுவழியில் பயணிகள் தவிப்பு பயணிகளை...