×

விருதுநகரில் விற்பனைக்கு இருந்த 1,314 மதுபாட்டிகள் பறிமுதல்

விருதுநகர், டிச.30: விருதுநகரில் டாஸ்மாக் பாரில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 1,314 மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரயில்வே பாலத்திற்கு கீழ் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதை ஒட்டி செயல்படும் பாரினை அசோக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல்  இன்று மாலை 5 மணி வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நேரத்தில் பாரில் மதுபாட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரால், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் பாரில் 1,314 மதுபாட்டிகள் விற்பனைக்கு இருந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பாரில் இருந்த நட்பு நாகராஜ்(31), முனியாண்டி(19), சதீஸ்குமார்(27), பார் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.
60 மதுபாட்டில்கள் பறிமுதல் சாத்தூர்,:  சாத்தூர் ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து நேற்றும் இன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. நேற்று டாஸ்மாக் விடுமுறை தினத்தில் பெரியகெல்லபட்டி விலக்கு அருகில் வைத்து மது விற்பனை செய்த அமீர்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கைது செய்த சாத்தூர் தாலுகா காவல்நிலைய எஸ்.ஐ செய்யது இப்ராகீம் தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Brewers ,Virudhunagar ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...