×

உத்தமபாளையம் பதற்றமான பூத்துகளில் தீவிர கண்காணிப்பு தேவை வாக்காளர்கள் கோரிக்கை

தேவாரம், டிச.30: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பதற்ற்ம நிறைந்த பூத்களாக கருதப்படும் 11 வாக்குசாவடிகளில் அதிகளவில் போலீசாரை பணியில் அமர்த்திட வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 92 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் மொத்தம் 49,141 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 24,310 பேரும், பெண்களில், 24,302 பேர் மற்றும் திருநங்கையர் 8 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இதில் 11 பூத்கள் மட்டும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.கோகிலாபுரம், உ.அம்மாபட்டி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளன. இவற்றில் பிரச்னை ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Voters ,Uthamapalayam ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...