×

பஞ்.தலைவர் பதவிக்கு ரூ.16 லட்சம் கிரையம் அதிமுக எம்எல்ஏ கணவரை கைது செய்யாவிட்டால் இன்று பஸ் மறியல் அம்பேத்கர் மக்கள் இயக்கம் எச்சரிக்கை

திருச்சி, டிச.30: வலையூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒட்டு மொத்த வாக்காளரின் ஓட்டுக்கு 16 லட்சம் கிரையம் பெற்ற எம்எல்ஏ கணவரை கைது செய்யாவிட்டால் இன்று பஸ் மறியலில் ஈடுபடுவோம் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் என்பவர் வழையூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒட்டு மொத்த வாக்காளரின் ஓட்டுக்கு ரூ.16 லட்சம் கிரையம் பெற்றுள்ளார். ஆளும் கட்சியாக இருப்பதால் தனது மனைவி எம்எல்ஏவாக இருப்பதால் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதை ஒன்றிய ஆணையர் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இவர்கள் இருவரையும் உடனே கைது செய்யாவிடில் இன்று (30ம் தேதி) வலையூர் கிராமத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் சிராளன், புரட்சி மணி ஆகியோர் தலைமையில் பஸ் மறியல் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bus Strike ,Ambedkar People's Movement ,
× RELATED பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்